29 அக்டோபர் 2011

விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்களை கறுப்பு பட்டியலில் சேர்க்கவுள்ளதாம் ஸ்ரீலங்கா.

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும், இலங்கைக்கு செல்வதை தடைசெய்யும் வகையில் அவர்களின் பெயர் விபரங்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவர்களின் உண்மையான பெயர்களை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
புலிகளின் இந்த சர்வதேச செயற்பாட்டாளர்கள் தமது மனைவி, பிள்ளைகளுடன்,சுற்றுலா செல்லும் போர்வையில் இலங்கைக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் தம்முடன் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் தமது நண்பர்கள் எனக் கூறி அழைத்து செல்வதாகவும் இவர்கள் வடபகுதிக்கு சென்று புலிகளின் ஆதரவாளர்களை சந்தித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக திவயின கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக