25 அக்டோபர் 2011

சனல்4 வெளியிட்ட "இலங்கையின் கொலைக்களம்"எனும் காணொளி பக்கச்சார்பற்றது.

இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து சனல் 04 தொலைக்காட்சி வெளியிட்டிருந்த காணொளி பக்கச்சார்பான முறையிலோ அல்லது ஊடக விதிகளுக்கு முரணான வகையிலோ தயாரிக்கப்படவில்லை என பிரித்தானிய ஊடக கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் கொலைக்களம் என்னும் காணொளியை வெளியிட்டிருந்தது.
சனல் 4 ஊடகத்திற்கு எதிராக 118 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் காணொளியானது ஊடக விதிகளை மீறி வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக சீ21 என்ற சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக