14 அக்டோபர் 2011

பதுமனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

திருகோணமலை பாலம்பட்டாறு பிரதேசத்தின் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதனை எதிர்வரும் 29 திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி எஸ் தைகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான கால பகுதியில் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவத்தினரை கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதுமன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக