25 பிப்ரவரி 2011

மட்டக்களப்பில் மதபோதகர்கள் கடத்தப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் வெள்ளநிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மதபோதகர்கள் மூவர் பிள்ளையான் குழுவினரால் அழைக்கப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் நான்காம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கடந்த வெள்ள அனர்தத்தின் போது கிழக்கில் பாரிய அவலங்களை எதிர்கொண்டு வந்த மட்டக்களப்பு மக்களுக்கு உதவி புரிந்த சிவானந்தம் லூப் பாஸ்ரர் கணேசமூர்த்தி,சிவகுமார் யோனத் ஆகிய மூவருமே பிடிக்கப்பட்டவர்களாவர் கடந்த 22 ஆம் திகதி தமது அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் அலுவலகத்தில் இருந்து ரமேஸ் என்பவரால் அழைப்பு அனுப்பப்பட்டிருக்கின்றது அதனை அடுத்து அங்கு சென்ற போதகர்கள் மூவரும் காணாமல் போயிருக்கின்றனர்.அதன் பின்னர் நேற்று (24-02-2011) மட்டக்களப்பு பொலிஸாரிடம் காணாமல் போனமை தொடர்பில் முறையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பழைய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவரையும் உறவினர்கள் சந்தித்திருக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் மூவரும் கொழும்பு நான்காம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தமக்குத் தகவல் கிடைத்ததாக போதகர்களின் உறவினர்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிள்ளையானின் அலுவலகத்தில் மக்களுக்கான உதவிக்கான நிதி எங்கிருந்து கிடைத்தது,எவ்வளவு செலவிடப்பட்டது போன்ற விடயங்கள் குறித்து மிரட்டிக் கேட்டனர் என்று போதகர்கள் தமது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து வெளியே வர இராணுவப் புலனாய்வாளர்கள் அவர்களைக் கடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக