25 அக்டோபர் 2010

செட்டிக்குளம் பகுதியில் பாரிய சிங்களப் படைமுகாம்!

வவுனியா செட்டிகுளம் வதைமுகாம் பகுதியில் ஸ்ரீலங்காப்படையினரால் பாரிய படைமுகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை தற்காலிகமாக தங்கவைக்க வவனியாவில் உள்ள செட்டிகுளம் பகுதியில் பெருமளவான காணிகள் சீர்செய்யப்பட்டு மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள்.
தற்போது மக்கள் வாழ்விடங்களில் குடியேற்றியுள்ள நிலையில் மக்களை அடைத்துவைத்திருந்த காணியில் குறிப்பாக வலயம் நான்கு பகுதியில் நீர்வளம் கொண்ட இடத்தில் மன்னார் மதவாச்சி முதன்மை வீதிக்கு அருகில் ஸ்ரீலங்காப்படையினர் பாரிய படைத்தளம் ஒன்று அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மக்களோ ஊடகவியலாளர்களோ செல்ல அனுமதிக்கபடவில்லை என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக