20 அக்டோபர் 2010

புத்தளம் கடற்கரையில் அரை நிர்வாண பெண்ணின் சடலம்!

புத்தளம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபடுவா கடற்கரையில் இன்று பின்னேரம் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட இச்சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகிக் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். குறித்த சடலத்தில் இருந்த உள்ளாடை மற்றும் நீண்ட பாவாடையை வைத்தே அது பெண்ணொருவரின் சடலம் என இனங்காணப்பட்டுள்ளது.
இறந்த பெண்மணி கணிசமான அளவு நேரத்துக்குக் கடலில் இருந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் பல சடலங்கள் இக்கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக