11 அக்டோபர் 2010

சண்டே லீடர் ஆசிரியரைக் கொல்லச் சதி!

இறுதிக் கட்டப் போரின்போது வெள்ளைக்கொடி ஏந்தியபடி சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு களத்திலிருந்த இராணுவத்தினருக்கு கட்டளை இட்டது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷதான் என்று சரத் பொன்சேகா தெரிவித்ததாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தி குறித்த வழக்கு விசாரணைகள் தற்போது படுசூடாகச் சென்று வருகின்றன. சரத் பொன்சேகா தாம் இவ்வாறு தெரிவிக்கவில்லை என்று மறுத்தாலும்கூட, சரத்தைப் பேட்டிகண்ட சண்டே லீடர் ஆசிரியர் பெட்ரிகா ஜான்ஸ் சரத் இவ்வாறு கூறியது உண்மையே என்று தனது சாட்சியத்தைத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை தொடரவுள்ளது.
இச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சண்டே லீடர் ஆசிரியரைக் கொலை செய்வது தான் தீர்வு எனக் கருதும் பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலர் இத்திட்டம் குறித்து இரகசிய கூட்டம் ஒன்றைக் கூடியுள்ளனர். இக்கொலைக்கான பழியை சரத் பொன்சேகா சார்பானவர்கள் மீது போடவும் அவர்கள் திட்டமிடுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இதற்கிடையில், உண்மையில் சண்டே லீடர் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்குப் பின்னால் சரத் பொன்சேகாதான் உள்ளார் என்று அரசு பிரதி அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக