11 அக்டோபர் 2010

பாகிஸ்தான் இலங்கையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சிகொடுத்ததா?

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சிகளைக் கொடுத்து இந்தியாவிற்குள் அனுப்பிவைத்ததாக அதன் முன்னாள் ஜனாதிபதி பெர்விஷ் முஷ்ரப் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் மிகவும் பரபரப்பாக இந்தப் பேட்டி ஜேர்மன் ஊடகம் ஒன்றிற்கு முஷ்ரப்பால், வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை தமது நாட்டிலும், அயல் நாடுகளிலும் பயிற்சிகளைக் கொடுத்துள்ளது என்ற சாயலில் அவர் பேட்டி அமைந்துள்ளபோதும், தமது நாடு தீவிரவாதிகளுக்கு பயிற்சிகளைக் கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்பி வைத்த்ததாக அவர் பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளார்.
2005 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பல பயற்சிகளை எடுத்து இலங்கையில் இருந்து இலகுவாக இந்தியாவுக்குள் சென்றுள்ளதாகவும் தற்போது செய்திகள் கசிந்துள்ளது. இந்தியா தமது நட்பு நாடு எனக் கூறிவரும் இலங்கை, போர் வெற்றிக்கும் இந்தியாவே உறுதுணையாக இருந்ததாக பல இடங்களில் கூறிவருகிறது. இந்நிலையில் இலங்கை பன் முகங்களைக் கொண்ட ஒரு பயங்கரவாத நாடாகச் செய்ல்பட்டு வருகின்றமை தற்போது செய்திகளாக கசிகின்றன.
பெர்விஷ் முஷ்ரப் தாம் இலங்கையை நேரடியாகப் பயன்படுத்தியதாகக் கூறவில்லை என்றாலும் அவர் ஜேர்மன் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், இது குறித்து மறைமுகமாக பல தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து அறிந்திருக்கவில்லையா, இல்லை இலங்கை அரசானது றோவின் கண்களில் மண்ணைத் தூவியுள்ளதா என்ற சந்தேகங்களும் தற்போது வலுக்கிறது.
பெர்விஷ் முஷ்ரப்பின் பேட்டி காரணமாக பாகிஸ்தான் இந்தியாவுக்குள் முறுகல் நிலைதோன்றுகிறதோ இல்லையோ, இந்தியா இலங்கைக்கு இடையே ராஜதந்திர ரீதியாக விரிசல்கள் ஏற்படலாம் என அரசியல் அவதானிகளால் எதிர்வு கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக