08 அக்டோபர் 2010

பெண்கள் மீது சேட்டை!சிங்கள சிப்பாய்க்கு செம சாத்து.

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்குள் இன்று அதிகாலை 1.00 மணி அளவில் புகுந்து அங்கிருந்த பெண்களை பலாத்காரம் செய்ய முயன்ற சிங்கள சிப்பாய் ஒருவர் பொதுமக்களால் மரத்தில் கட்டிப்போட்டு நன்றாக நையப் புடைக்கப்பட்டார்.
அங்கு அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மீனவக் குடும்பங்கள் இது போன்ற குடியிருப்புக்களில் வசிக்கின்றார்கள். ஆண்கள் மீன்பிடித் தொழிலுக்காக மாலையில் கடலுக்கு சென்று காலையில்தான் கரைக்கு திரும்புகின்றமை வழக்கம்.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிங்கள சிப்பாய்கள் இக்குடியிருப்புக்களுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து பெண்கள் மீது சேட்டைகள் புரிந்து வந்திருக்கின்றார்கள். கடந்த மூன்று நாட்களாக சிப்பாய்களின் சேட்டைகள் கடுமையாக அதிகரித்து இருந்தன. இந்நிலையில் குறித்த சிப்பாய் குடியிருப்புக்குள் புகுந்தபோது அங்கிருந்த பெண்கள் பெரிதாக சத்தமிட்டிருக்கின்றனர்.
பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து மரம் ஒன்றில் கட்டி வைத்து நன்றாக அடித்தார்கள். காலையில் மருதங்கேணி உதவி அரச அதிபர் அலுவலகத்தைச் சேர்ந்த சிவில் அதிகாரிகள், வடமராட்சி கிழக்குக்கான கட்டளை இடும் சிங்களப்படை அதிகாரி ஆகியோரை நேரில் அழைத்து வந்து சிப்பாயை கையும் மெய்யுமாக பிடித்திருக்கின்றமையை காட்டினர்.
அப்பகுதி மக்கள் , சிவில் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் வைத்து படை அதிகாரி அச்சிப்பாய்க்கு அடி போட்டார், அத்துடன் இனி மேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்று வாக்குறுதி வழங்கி விட்டு சிப்பாயை மீட்டுக் கொண்டு போனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக