05 அக்டோபர் 2010

கோத்தபாயவின் டிபெண்டர் வாகனம் மோதியதில் கொழும்பு நீர் விநியோகம் தடை!

கொழும்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாய் உடைந்ததில் நேற்று பிற்பகல் அப்பகுதிகளுக்கான நீர்விநியோகம் தடைப்பட்டது. இந்த பிரதான குழாய் மீது கோத்தபாயவின் பாதுகாப்புப் பிரிவினரின் டிபெண்டர் வாகனம் மோதியதாலேயே அது உடைந்துள்ளது. அம்பத்தல சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கு குடிநீரை விநியோகிக்கும் பிரதான குழாய்மீதே இவ்வாகனம் மோதியுள்ளது. மேற்படி விபத்தானது பாராளுமன்றத்துக்கு அருகில் ஏற்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
மேலும், இவ்விபத்தில் காயப்பட்ட ஐவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் இருவருக்கு சிறிய காயங்களே ஏற்பட்டிருந்ததால் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக