26 ஜூன் 2012

‘பிரபாகரன் வீரகாவியம் – எழுச்சியும் வீழ்ச்சியும்"நூல் வெளியீடு!

‘பிரபாகரன் வீரகாவியம் – எழுச்சியும் வீழ்ச்சியும்‘ ஆங்கில நூல் சென்னையில் வெளியீடுதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் வரலாற்றை விபரிக்கும் புதிய ஆங்கில நூல் ஒன்று சென்னையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
‘The Prabhakaran Saga – The Rise and Fall of an Eelam Warrior’ ( பிரபாகரன் வீரகாவியம் – ஒரு ஈழப் போர்வீரனின் எழுச்சியும் வீழ்ச்சியும்) என்ற தலைப்பிலான இந்த நூலை சென்னையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் வரலாற்றாசிரியரான எஸ்.முத்தையா வெளியிட, முதற்பிரதியை ஊடகவியலாளர் மாலன் பெற்றுக்கொண்டார்.
இந்த நூலை மூத்த ஊடகவியலாளர் எஸ்.முராரி எழுதியுள்ளார்.
ஆயுதப்போராட்டத்தின் ஊடாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை வே.பிரபாகரன் எவ்வாறு கட்டியெழுப்பினார் என்பது உள்ளிட்ட பல விடயங்களை அவர் இந்த நூலில் விபரித்துள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வரலாற்றாசிரியர் எஸ்.முத்தையா, சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் பொருளதார நிலையில் முன்னேற்றத்தை எட்டுவதன் மூலம் அங்கு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
அதேவேளை தமிழர் பிரச்சினைக்கு பொருளாதார நிலையை விட, அரசியல் தீர்வு முக்கியமானது என்று என்று சென்னை பல்கலைக்கழக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய கற்கைகள் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பேராசிரியர் வி.சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடும் சிறிலங்கா அரசுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிகழ்வில் உரையாற்றிய கல்வியாளர்கள் மற்றும் ஊடகவிலாளர்கள், இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வுக்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நூலின் ஆசிரியர் எஸ்.முராரி, தாம் ஒரு ஊடகவியலாளராக சிறிலங்காவுக்கு மேற்கொண்ட எண்ணற்ற பயணங்களே இந்த நூலை எழுதக் காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூல் 392 பக்கங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக