13 ஜூன் 2012

தமிழ் மக்களின் பிரதிநிதி என்பதனால்தான் சிங்கக்கொடியை ஏற்றவில்லை!

தமிழ் மக்களின் வெளிப்பாடகவே நான் சிங்கக் கொடியினை ஏற்றவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சமூக அமைச்சின் நிகழ்வென்றில் வைத்து சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பேரேரா பல தடைவ வர்புறுத்தியும் தேசியக் கொடியான சிங்கக் கொடியினை ஏற்ற குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயக மூர்த்தி திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்திருந்நதார்.
இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பாக அப்பாத்துரை விநாயமூர்த்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்திலேயே மேற்படி விடையத்தினைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளாகவே என்னைத் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனடிப்படையில் தமிழ் மக்களின் கருத்துக்களையும் அவர்களுடைய மனநிலையினை வெளிப்படுத்துவதாகவே என்னுடையதும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய செயற்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும்.
இதன் காரணமாகவே தேசியக் கொடியான சிங்கக் கொடியின் கீழ் ஒன்றிணைய தமிழ் மக்கள் ஒரு போதும் விரும்பவில்லை. அவர்கள் தமது தனித்துவத்துவத்துடன் இருப்பதற்கே விரும்புகின்றார்கள். என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக