27 ஜூன் 2012

மகிந்தவை எதிர்க்கட்சி தலைவராக்கியது தவறாகி விட்டது என்கிறார் சந்திரிகா!

மகிந்தவை எதிர்க்கட்சி தலைவராக நியமித்தமை தான் செய்த தவறு என்கிறார் சந்திரிகாதனது ஆட்சிக் காலத்தில் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததே தான் செய்த மிகப் பெரிய தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது, அங்கு அவரைச் சந்தித்த தற்போதைய மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் மேற்கண்டவாறு சந்திரிகா தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சியின்போது மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியது எனது மிகப் பெரிய தவறு என்றும், அவர் தற்போது சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்க தான் செய்த தவறே காரணம் எனவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
மகிந்த ராஜபக்rவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியமையை அன்று நான் செய்த சிறந்த விடயமாக நினைத்தேன். அப்போதைய அரசு மக்களுக்கு இடையூறுகளைச் செய்தது.
ஆயிரத்து 600 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இதன் காரணமாக நான் அன்று குறித்த முடிவை எடுத்தேன்.
ரணிலுடன் இணைந்து செயற்பட எவ்வளவு முயற்சிகள் செய்தபோதிலும் அது கைகூடவில்லை.
நான் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டேன். விரும்பியவர்களுக்கு ஆலோசனை வழங்குவேன் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித் சேனாரத்ன 2004ம் ஆண்டு ஐதேக ஆட்சியை கலைத்ததே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா செய்த பெரிய தவறு என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக