22 ஜூன் 2012

இந்தியாவை வம்புக்கு இழுத்த மகிந்த ராஜபக்ச!

தமிழ்நாட்டு மீனவர்கள் வேண்டுமென்றே சிறிலங்கா கடற்பரப்புக்குள் வந்து, இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தையும், அரிய கடல் செல்வங்களையும் கொள்ளையிடுவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
பிறேசிலின் றியோடிஜெனிரோ நகரில் நடைபெறும் - றியோ பிளஸ் 20 எனப்படும் தொடர் வளர்ச்சிக்கான இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஐ.நா மாநாட்டில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் இந்தியாவின் பெயரையோ தமிழ்நாட்டின் பெயரையோ நேரடியாகக் கூறவில்லை.
ஆனாலும், "சிறிலங்காவுக்கு அருகில், வடக்கில் உள்ள அயல் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள்'' என்று அடையாளப்படுத்தியிருக்கிறார்.
அத்துடன் பிரச்சினைக்குரிய பகுதி பாக்கு நீரிணை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு செய்பவர்கள் மீது, அனைத்துலக கடல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் வகையிலும் சிறிலங்கா அதிபர் உரையாற்றியுள்ளார்.
சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிப்பதாக தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்தால், இந்தச் சட்டப்படி அவர்களைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குச் சிறையில் அடைக்க சிறிலங்கா முடிவு செய்துள்ளது என்பதையே மகிந்த ராஜபக்சவின் இந்த உரை எடுத்துக் காட்டுவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக