19 ஜூன் 2012

தடைக்கு மத்தியிலும் மக்கள் வலி.வடக்கில் ஆர்ப்பாட்டம்!

அரசின் திட்டமிட்ட நில அபகரிப்பினை எதிர்த்தும் மக்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்யக் கோரியும் வலி. வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காவற்றுறையினரால் தடுக்கப்பட்ட போதிலும் இறுதியில் குறிப்பிட்ட அளவு மக்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் சென்று மகஜர் கையளித்தனர்.
வலி. வடக்குப் பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இருநூற்றைம்பது பேர் வரையான மக்கள் கலந்து கொண்டனர்.
தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொண்ட பினனர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கச் சென்ற மக்களைத் தடுத்த காவற்றுறையினர் ஆலய வாசலில் மறித்து மேலும் செல்லவிடாது தடுத்தனர்.
இதனையடுத்து, ஆப்பாட்டக்காரர்களுக்கும் காவற்றுறையினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது. அதனையடுத்து, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் காங்கேசன்துறை காவற்றுறை அத்தியட்சகரும் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் அடிப்படையில் குறிப்பிட்ட சிலருடன் சென்று மகஜர் கையளிக்க அனுமதிக்கப்பட்டது.
இதனையடுத்து உதவிப் பிரதேச செயலாளர் கே.பிரபாகரமூர்த்தியிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. அத்துடன் மகஜரின் ஒரு பிரதி மாவை சேனாதிராசாவிடமும் கையளிக்கப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்மைபபு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினாகளான சிவாஜிலிங்கம், கஜேந்திரன், மற்றும் சீ.வி.கே சிவஞானம் என்.வித்தியாதரன், பிரதேச சபைகளின் தலைவாகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட வலி. வடக்குப் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக