
பிரித்தானிய காவற்துறையினர் மக்கள் கூடுவதை தடுப்பதற்காக எடுத்த முயற்சிகளையும் தாண்டி மக்கள் Terminal 4 இல் தேசியக்கொடிகளை கையில் ஏந்தியவாறு "Sri Lanka President War Criminal" என்ற கோசத்துடன் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர்.
மகிந்த ராஜபக்ச இலண்டனுக்குள் வந்துவிட்டாரா என்பதை உறுதியாக அறிந்திருக்காத மக்கள் இனியும் அவரின் வருகை தெரியவரும் பட்சத்தில் தவறாது அங்கு வந்து அவர் நாடு திரும்பும் வரை அவர் செல்லுமிடமெல்லாம் சென்று எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்று உறுதியாகக்கூறி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று எழுச்சியாக 3 தடவைகள் உரத்த குரலில் உறுதியெடுத்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டு கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக