02 ஜூன் 2012

தமிழர்கள் கூலிப்படைகளாக வந்தே குடியேறினர்"வந்தேறு குடியான தேரரின் திமிர் பேச்சு!

வந்தேறுகுடிகள் தொடர்பிலான விவாதம் தேவையில்லைதமிழர்கள் வந்தேறுகுடிகள்தான் என்பதை நிரூபிப்பதற்கு விவாதம் தேவையில்லை. வரலாற்றுச் சான்றுகள் உள்ளன எனக் கூறி கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவின் சவாலை ஏற்கமறுத்துவிட்டார் எல்லாவ மேதானந்த தேரர்.தமிழர்கள் எந்த உலகிலிருந்து வந்திருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் சிங்களவர்களுடன் ஒத்துத்தான் வாழவேண்டும் என்றும் தேரர் கூறுகின்றார்.
வடக்கு, தமிழர்களுக்கு மட்டும் உரிய பிரதேசம் அல்ல. யார் வேண்டுமானாலும் எங்கும் வாழலாம் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பி.பி.சிக்கு தெரிவித்திருந்தார். பாதுகாப்புச் செயலரின் கூற்றை வரவேற்று அதற்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் வகையில், “வந்தேறு குடிகளான தமிழர்கள் வடக்குக்கு உரிமை கோருவதா” எனக் கடும் போக்கிலான கருத்துகளை முன்வைத்தார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர்.
இதனால் கொதிப்படைந்த தமிழ்த் தலைவர்கள், பாதுகாப்புச் செயலர், எல்லாவல மேதானந்த தேரர் ஆகியோரின் கருத்துகளை வன்மையாகக் கண்டித்ததுடன், வரலாறு தெரியாமல் உளறுகின்றனர் என்றும் தக்கவகையில் பதிலடி கொடுத்தனர்.
இதற்கு ஒருபடி மேலே சென்று நவ சமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, ”இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராகவே உள்ளேன். சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள். எனவே, முதுகெலும்பிருந்தால் வரலாறு தெரிந்தால் தமிழர்களை வந்தேறுகுடிகள் எனக் கூறும் எல்லாவல மேதானந்த தேரர் பகிரங்க விவாதமொன்றுக்கு வரவேண்டும்” என்று சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில், விக்கிரமபாகு கருணாரட்ன விடுத்த சவாலை ஏற்று நீங்கள் விவாதத்திற்குத் தயாராகுவீர்களா? என எல்லாவல மேதானந்த தேரரிடம் வினவியபோது அவர் கூறியவை வருமாறு:
“தமிழர்கள் வந்தேறு குடிகள்தான். கூலிப்படைகளாக வந்தே அவர்கள் இலங்கையில் குடித்தனம் புகுந்தனர். இதனை நிரூபிப்பதற்கு விவாதம் தேவையில்லை. வரலாற்றுச் சான்றுகள் உரியவகையில் உள்ளன.
தமிழர்கள் எந்த உலகிலிருந்து வந்திருந்தாலும் எமக்குப் பரவாயில்லை. அவர்கள் சிங்களவர்களுடன் ஒத்துத்தான் வாழவேண்டும். ஒற்றுமையாக வாழ்வதற்கு முன்வரவேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று தமிழர்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்கின்றனர் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக