16 ஜூன் 2012

அல்,கொய்தா தாக்குதலும் புலிகளின் விமானங்களும் ஒரே விதமான அச்சுறுத்தலாம்!

“அமெரிக்காவில் அல்-காய்தாவால் நடத்தப்பட்ட செப்.11 விமானத் தாக்குதல்களும், இலங்கையில் விடுதலைப்புலிகள் உபயோகித்த விமானங்களும், ஒரே ரகத்திலான அச்சுறுத்தல்களே” இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்திய ராணுவத்தின் லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங்.
செப். 11 தாக்குதல், அல்-காய்தாவால் 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடட் ஏர்லைன்ஸ் வர்த்தக விமானங்களை கடத்தி இலக்குகள் மீது மோதி நடைபெற்ற தாக்குதல் அது.
விடுதலைப் புலிகளால் உபயோகிக்கப்பட்டவை, லைட்-ஏர்கிராஃப்ட் என அழைக்கப்படும் இரு இலகு ரக விமானங்கள். இவையும், வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கான விமானங்களே. அவற்றில் சில மாற்றங்கள் விடுதலைப் புலிகளால் செய்யப்பட்டு, குண்டுகளை காவிச் சென்று வீசும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருந்தன.
செப். 11 தாக்குதலின்பின், அமெரிக்கா அல்-காய்தா தலைவர் பின் லேடன் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. ஆப்கானிஸ் இருந்து தப்பி பாகிஸ்தானில் மறைந்திருந்த பின் லேடனை கடந்த வருடம் அதிரடித் தாக்குதல் ஒன்றில் கொன்ற பின்னரே ஓய்ந்தது. (ஆனால், அல்-காய்தா அச்சுறுத்தல் இன்னமும் ஓயவில்லை)
2008-ல் இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்களின்பின், இந்தியா இலங்கைக்கு விமானங்களை ட்ராக் செய்யும் ராடார்களை கொடுத்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் புரிய, இலங்கை அரசுக்கு பல நாடுகள் கை கொடுத்தன. யுத்தம் இலங்கை ராணுவத்துக்கு வெற்றியாக முடிந்து, விடுதலைப் புலிகளின் தலைவரும் அதில் கொல்லப்பட்டார்.
2001-ல் நடைபெற்ற செப்.11 தாக்குதலை உத்தரவிட்ட அல்-காய்தா தலைவர், அது நடந்து 10 ஆண்டுகளின்பின் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தத் துவங்கி 1 வருடத்திலேயே, தாக்குதல் செய்த விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. யுத்தமும் முடிந்து விட்டது.
இந்த இரு சம்பவங்களும், ஒரே ரகத்திலானவை என்று வர்ணித்திருக்கிறார் லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங்.
இந்திய ராணுவத்தில், விமானங்களை மானிட்டர் செய்வதற்கும், எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்குமாக சிறப்பு பிரிவு ஒன்று உண்டு. ராணுவ வட்டாரங்களில் AAD என்று சுருக்கமாக அறியப்பட்ட அந்த சிறப்பு பிரிவின் பெயர், Army Air Defence. இந்த AAD பிரிவின் டைரக்டர் ஜெனரல்தான், லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங்.
விமான ஏவுகணைப் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய லெப்டினென்ட் ஜெனரல் சிங், “அரசு அல்லாத அமைப்புகள் விமானங்களை கொண்டு தாக்குவதிலேயே, எமது கவனத்தை முக்கியமாக செலுத்துகிறோம். அவை சிவில் (பயணிகள்) விமானங்களாக இருக்கலாம், அல்லது ராணுவ விமானங்களாக இருக்கலாம்.
தவறானவர்களின் கைகளில் அந்த விமானங்கள் சென்றடைந்தால், அதை அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கிறோம். விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல்களை நடத்தியதை நாம் மிக சீரியசாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுத்த காரணம் அதுதான்” என்றவர், “புலிகளின் சிறிய விமானங்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல், அல்-காய்தாவின் செப்.11 தாக்குதலுக்கு எந்த விதத்திலும் குறைந்த அச்சுறுத்தல் அல்ல” என்றும் பேசினார்.
“இப்படியான தாக்குதல்கள் இந்திய வான் பரப்பிலும் நடக்கலாம் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம். அல்-காய்தா மற்றும் விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத அமைப்பினரின் தாக்குதல்கள் இந்தியாமீது நடத்தப்பட்டால், அவற்றைத் தடுப்பதற்காக விமான எதிர்ப்பு உபகரணங்களை AAD டெவலப் செய்துள்ளது.
முழுமையான ஆட்டோமேட்டிக் கன்ட்ரோல் மற்றும் ரிப்போர்டிங் சிஸ்டம் ஒன்று எம்மால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லைக்குள் வெளி சக்திகள் உள்ளே நுழையக்கூடிய இடங்களில், இந்த சிஸ்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. யுத்த காலத்தில்தான் இவை இயங்கும் என்றில்லை. சாதாரண காலங்களிலும், இரவு பகலாக இவை இயக்கப்படுகின்றன.
இந்த வான் பாதுகாப்பு சிஸ்டம், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு கல்லூரியால் (College of Air Defence) டெவலப் செய்யப்பட்டது. தற்போது விமானிகளற்ற உளவு விமானங்களை ட்ராக்-டவுன் செய்யும் சிஸ்டம் ஒன்று டெவலப்பிங் ஸ்டேஜில் உள்ளது” என்றும் விளக்கினார் லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கம் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில், புலிகளின் விமானங்கள் தாக்கதலில் ஈடுபட்டபின் இந்தியா இலங்கை ராணவத்தின் கைகளை பலப்படுத்தியதன் காரணங்களில் இந்த வான் அச்சுறுத்தலும் ஒன்று” என்றும் தெரிவித்தார் அவர்.
(2009 யுத்தத்தின்போது, புரியாமலிருந்த சில விஷயங்கள் இப்போது புரிவது போல உள்ளனவா?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக