06 ஜூன் 2012

மகிந்தரை விரட்டியடிக்கும் வரை ஆர்ப்பாட்டம்! தமிழர்கள் சபதம்!

இலண்டனை விட்டு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவை விரட்டியடிக்கும் வரை இன்று (புதன்கிழமை) முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்துவதற்கு பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை 8:00 மணிக்கு மன்சன் இல்லத்திற்கு முன்பாக அணிதிரளும் ஈழத்தமிழர்கள், அங்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நிகழ்த்திய பின்னர் அங்கிருந்து காலை 10:00 மணிக்கு அருகில் அமைந்திருக்கும் போல் மால் பகுதியில் மகிந்தர் விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் மல்பரோ ஹவுஸ் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நிகழ்த்தவுள்ளனர்.
இப்போராட்டம் நடைபெறும் ஏககாலத்தில் மகிந்தரும் அவரது குழுவினரும் அடிக்கடி சென்று வரும் பார்க் லேன் பகுதியில் உள்ள ஹில்ரன் விடுதியையும் முற்றுகையிட்டு ஈழத்தமிழர்களால் போராட்டம் நிகழ்த்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை இலண்டனை விட்டு மகிந்தர் புறப்படும் பொழுது ஹீத்ரோ விமான நிலையத்திலும் முற்றுகைப் போராட்டம் நிகழ்த்துவதற்கு ஈழத்தமிழர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக