21 ஜூன் 2012

புலிகள் தயாரித்த பல்குழல் எறிகணை!

புலிகள் தயாரித்த பல்குழல் எறிகணை: ஆச்சரியத்தில் இராணுவம் !விடுதலைப் புலிகள் தயாரித்த பல்குழல் எறிகணை செலுத்தி ஒன்றை இராணுவம் மீட்டுள்ளதாக அறியப்படுகிறது. முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் இது மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் 6 எறிகணைகளைச் செலுத்தக்கூடிய பல்குழல் எறிகணைகளை புலிகள் உள்ளூரில் தயாரித்துள்ளனர்.
இதனைக் கண்டு இராணுவத்தினர் வியப்படைந்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.
இறுதி யுத்தத்தில் அவை பாவிக்கப்படவில்லை என்றும், இதனைப் புலிகள் ஏன் பாவிக்கவில்லை என்று தமக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூரில் கிடைக்கும், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி, இவ்வகையான கனரக ஆயுதங்களை புலிகள் மிக நுணுக்கமாகத் தயாரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள இராணுவத்தினர், புலிகளின் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை ஒன்றையும் கண்டுபிடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக