11 ஜூன் 2012

சிங்கக் கொடியை சுருட்டிப்போடுங்கள்"மகிந்தருக்கு பொலிசார் போட்ட ஆணை!

கடந்த வாரம் மகிந்தர் லண்டன் வந்தவேளை, அவருக்கு கொடுக்கப்பட்ட கறுப்பு நிற ரேஞ்-ரோவர் வாகனத்தில் இலங்கையின் தேசிய கொடியை ஏற்றவேண்டாம் என்று பிரித்தானியப் பொலிசார் கூறியுள்ளனர். மகிந்தரை விமானநிலையத்தில் ஏற்றுவதற்காகச் சென்ற வாகனத்திற்கும் இதே நிலை தான் தோன்றியுள்ளது. மகிந்தரின் வாகனத்தில் இலங்கைக் கொடியை ஏற்றவேண்டாம் என ஸ்காட்லன் யாட் உளவுப்பிரிவினரே தெரிவித்ததாக அவர்களின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. பிரித்தானிய மாகா ராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள சுமார் 54 நாடுகளின் தலைவர்கள் லண்டன் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களில், அந்தந்த நாட்டுக்குரிய தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.
ஆனால் மகிந்தருக்கு வழங்கப்பட்ட கறுப்பு நிற ரேஞ்-ரோவர் வாகனத்தில் பறக்கவிடப்பட்டிருந்த இலங்கையின் தேசிய கொடியை சுருட்டிக் கட்டி விடுமாறும், அதனைப் பறக்கவிடவேண்டாம் என்றும் ஸ்காட்லன் யாட் பொலிசார் கூறியுள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே தாம் இதனைத் தெரிவித்ததாக பொலிசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து மகிந்தரின் வாகனத்தில் உள்ள இலங்கையின் தேசியகொடி சுருட்டி கட்டப்பட்டதாம். அவர் லண்டன் வீதிகளில் செல்லும்போது எல்லாம் அக்கொடியைப் பறக்கவிட பொலிசார் அனுமதிக்கவில்லை. ஆனால் லண்டன் வந்த மற்றைய நாட்டுத் தலைவர்கள்(54 நாடுகள்) சர்வசாதாரணமாக தமது நாட்டுக் கொடிகள் பறக்க, வாகனங்களில் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக