26 ஜூன் 2012

ஐக்கியம் என்றால் பெருன்பான்மை இனத்தின் கீழ் அடங்கி வாழ்வதல்ல"மனோ கணேசன்

எமது நிலத்தை தந்து அந்த நிலத்தில் எம்மை வாழ விடுங்கள் என அரசாங்கத்திற்கு மிகவும் நாகரிகமான முறையில் தமிழ் மக்கள் சொல்லியிருக்கின்றனர். இதனைப் புரிந்துகொண்டு எம் மக்களின் காணிகளிலிருந்து படையினரை விலக்கி, மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று திருமுறிகண்டியில் நடைபெற்ற, காணி அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்த நிலம் எமக்குச் சொந்தம். எமது கடல் எமக்குச் சொந்தம். இராணுவமே எமது பகுதியிலிருந்து வெளியேறு என்ற செய்தியை சிங்கள அரசங்கத்திற்கு எடுத்துச் செல்லொயிருக்கின்றது இன்றைய இந்தப் போராட்டம். இந்தக் கடலையும் எமது நிலத்தினையும் எமக்கு தந்து விடுங்கள் என்று தமிழ் மக்கள் நாகரரீகமான முறையில் அரசாங்கத்திற்கு முறையில் சொல்லி இருக்கின்றார்கள்.
பிரிவுபடாத இலங்கைக்குள் தீர்வினை பெற்றுக் கொள்ள தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சொல்லி இருகின்றனர். இதனை ஆட்சியிலுள்ள அரசாங்கம் சரியாக புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும்.
ஐக்கியம் என்றால் பெருன்பான்மை இனத்தின் கீழ் அடங்கி வாழ்வதல்ல. ஐக்கியம் என்பதன் முதல் நிபந்தனையானது நில உரிமை, மண்ணுரிமையில் தங்கியிருக்கின்றது. தங்களுடைய நிலங்களை இழந்துவிட்டு எந்தவொரு இனமும் சுய மரியாதையுடனும் சுய உரிமையுடனும் வாழ மாட்டார்கள். என்பதை தமிழ் மக்கள் இன்று அரசாங்கத்திற்கு சொல்லி இருக்கின்றார்கள். என்றார்.
அத்துடன், இன்று முறிகண்டியில் நடைபெற்ற போராட்டமானது வடக்கு கிழக்கு எங்கும் விஸ்தரிக்க வேண்டும். பின்பு மலையகப் பகுதிகளிலும் செல்ல வேண்டும். எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் மனோகணேசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக