01 ஜூன் 2012

பிரித்தானிய தமிழ் மக்களுக்கு அவசர அழைப்பு!

மானிடத்திற்கெதிரான மாபெரும் படுகொலையினை அரங்கேற்றிய சிறிலங்கா சனாதிபதி இனப்படுகொலையாளி மகிந்த இராசபக்ச முக்கிய உரை ஒன்றினை பொதுநலவாயநாடுகளின் அழைப்பின்பேரில் யூன் 6ம் திகதி காலை 10.00 மணிக்கு ஆற்றுகின்றார்.
பொதுநலவாய அமைப்பின் இவ் மனிதாபிமானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் பொறுப்பற்ற செயலைக் கண்டித்தும் இனப்படுகொலையாளி மகிந்தாவின் உரையினை நிறுத்துமாறுகோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று அவசரமாக பொதுநலவாயஅமைப்பின் செயலகத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம்: Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX
நேரம்: Friday 1st of June 4.00pm-7.00pm
போராட்டத்தின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடுகள் அவசரஅவசரமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. எனவே தயவுசெய்து பெருந்தொகையான எண்ணிக்கையில் கலந்து கொண்டு இனப்படுகொலையாளி மகிந்தாவின் உரையினைதடுத்து நிறுத்துவதற்கு உதவுமாறு அனைத்து இலண்டன் வாழ் ஈழத்தமிழரையும் அழைத்து நிற்கின்றோம்.

- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக