14 ஜூன் 2012

புலிகளின் ஆதரவாளர்களினால் மகிந்தவிற்கு ஆபத்து இருந்ததாம்!

புலி ஆதரவாளர்களினால் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் –லலித் வீரதுங்கதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவியதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவிற்கு விஜயம்செய்த போது இவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு பிரித்தானிய அரசாங்கம் மிகவும் உச்சளவிலானபாதுகாப்பை வழங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் புலி ஆதரவாளர்களினால் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் அந்நாட்டு அரசாங்கம் மிகக் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி இரண்டு புலிச்செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருந்த பாக் ஹில்டன் ஹோட்டலின்பின் நுழைவாயில் வழியாக ஜனாதிபதிக்கு தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் பிரவேசித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரிவின் தீவிரகண்காணிப்பினால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பிரித்தானியகாவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானியாவின் அழைப்பினை நிராகரிப்பது பொருத்தமாக அமையாது என வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக