20 அக்டோபர் 2010

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க கையெழுத்துப் போராட்டம்!

மேலும் இரு ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்வதாக அண்மையில் இந்திய அரசு அறிவித்திருந்தது. இத்தடையை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தும் மகஜரின் கையெழுத்துப் பெறும் போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசியல் செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கூட்டத்தை சினிமா இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
50 மீற்றர் நீளமான பதாகையில் எழுதப்பட்டிருந்த மேற்படி மகஜரில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கையெழுத்திட்டனர். தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சமூக அமைப்புக்களும் இதில் கலந்துகொண்டன. நிகழ்வில் நூற்றுக்கணக்கான கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக