16 அக்டோபர் 2010

வெடிகுண்டுகளுடன் முன்னாள் புலிகள் உறுப்பினர் கைதாம்!

கண்டி, தலவாக்கலைப் பகுதியில் வெடிகுண்டுகளுடன் நடமாடிய முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவரைத் தாம் கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. கண்டியிலுள்ள நபர் ஒருவர் கொடுத்த தகவலை அடுத்தே இக்கைது நிகழ்ந்ததாகவும் அவர்கள் கூறினர்.
குறித்த நபர் நான்கரைக் கிலோ நிறையுடைய சி 4 வெடிமருந்துகளையும், 5 கைக்குண்டுகளையும், 1.6 கிலோ நிறையுடைய ஒரு கிளைமோரையும் இரு ஜெனரேற்றர்களையும் வைத்திருந்ததாக மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண பயங்கரவாதப் புலனாய்வுத் துறையில் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள அந்நபரிடம் தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றனவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக