09 அக்டோபர் 2010

துடிக்கிறது பாவப்பட்ட தமிழினம் நடப்பதோ நாடகமும் நடிப்பும்!

1983ஆம் ஆண்டிற்கு முன்பு, யாழ்ப்பாணத் தில் குடியிருந்தோம் என்று கூறிக்கொண்டு ஒரு தொகுதி சிங்கள மக்கள் யாழ்ப்பாணத் திற்கு வருகைதந்து யாழ்.புகையிரத நிலை யத்தில் தங்கியுள்ளனர். இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என அரச அதிகாரிகள் கூறுகின்றனர்.
சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப் பாண மண்ணை விட்டு வெளியேறிய தென் பகுதி மக்கள் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர் வதில் எந்த ஆட்சேபமும் கிடையாது.ஆனால் எதற்கும் சட்டரீதியாக அணுகு முறை தேவை. யாழ்.மாவட்டத்திலிருந்து 1983ஆம் ஆண்டு வெளியேறிய பின்னர் தென்பகுதியில் வாழ்ந்த இந்த மக்கள் முத லில் தமது மீளக்குடியமர்வு தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபருடன் கலந்தாலோசித் திருக்க வேண்டும்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என யாழ். அரச அதிபர் தெரிவிப்பதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.தமது மீள் குடியமர்வு தொடர்பில் எவருக் கும் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் திடீ ரென பஸ்சில் ஏறி யாழ்.புகையிரத நிலையத் துக்கு போய் தங்கியிருப்போம் என முடிபெடுப் பது என்பது எவ்வகையில் சாத்தியமும் பொருத் தமானதுமாகும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
ஆக இதற்குள் ஏதோ வில்லங்கம் இருப் பது மட்டும் எம் சிற்றறிவுக்குத் தெரிகிறது.தமது சொந்த இடத்திலிருந்து இடம் பெயர்ந்த ஒருசில தமிழ் குடும்பங்கள் முன்பு யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியிருந்தனர். அந்தக் குடும்பங்களை உடனடியாக வெளி யேறுமாறு பணிக்கப்பட்டது.இதற்கு மேலாக யாழ்ப்பாண மாவட்ட எல் லைக்குள் புகையிரதப் பாதைப் பகுதியில் குடி யிருந்த தமிழ் மக்கள் உடனடியாக வெளி யேற்றப்பட்டனர். நிலைமை இதுவாக இருக் கும் போது தென்பகுதி மக்களை யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்தது யார்?
அனுமதியின்றி அடாத்தாக அவர்கள் யாழ். புகையிரத நிலை யத்தில் தங்கியிருப்பார்களாயின் அவர்களை வெளியேறுமாறு பணிப்பு விடுவதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது எதற் காக?எல்லாமே நாடகமும் நடிப்பும்தான் நடக்கிறது. பாவப்பட்ட தமிழினம் பதவி ஆசைக்காக தன்னினம் விற்கும் கூட்டத்தின் கொடுமைக் குள் ஆளாகியுள்ளது.
எதுவாயினும் 1983 யூலைக்கலவரத்தில் தென்பகுதியில் எல்லாம் இழந்து தங்கள் இருப்பிடத்தையும் இழந்த தமிழ் மக்கள் அந்த இடங்களுக்குப் போகமுடியுமா? அதற்கு வசதிகள் உண்டா? அப்படிப் போக முடிந்தால் எடுத்த எடுப்பில் அங்கு போய்த் தங்கமுடி யுமா? இவற்றையயல்லாம் ஆராய்ந்தால் யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள தென்ப குதி மக்கள் ஏற்கனவே போடப்பட்ட திட்டமிட லின் அடிப்படையில்தான் இங்கு வந்துள்ளனர் என்பது தெளிவாகும். அட! நாசமறுப்பு. யாழ்.புகையிரத நிலையத்தில் தேவைக்கதிகமான மலகூடம் அமைக்கும் போதே தெரிந்திருக்க வேண்டும் அல்லவா! ஏதோ நாடகம் நடக்கப்போகின்றதென்று.

நன்றி:வலம்புரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக