14 அக்டோபர் 2010

தாய்லாந்தில் கைதானவர்கள் நாடு கடத்தப்பட உள்ளார்கள்!

சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் தாய்லாந்தில் இவ்வார ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 155 பேரில் 128 பேர் நாடு கடத்தப்பட இருக்கின்றார்கள் .
பாங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இவர்கள் நாடு கடத்தப்பட உள்ளார்கள் என்று தாய்லாந்தின் குடிவரவு சேவைப் பேச்சாளர் Colonel Worawat Amornwiwat என்று தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- ”155 பேரை பொலிஸார் ஆரம்பத்தில் கைது செய்திருந்தனர்.
ஆனால் உரிய பிரயாண ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடிந்த சிலர் அதன் பின் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். யுத்தம் காரணமாக இலங்கையை விட்டு ஓடி வந்த சிறுபான்மைத் தமிழர்களே இவர்கள். ஐ.நா ஊடாக அரசியல் தஞ்சம் பெற முயன்று வருகின்றார்கள்.
ஆனால் அநேகர் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவிலேயே தாய்லாந்து வந்திருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்கான விசா உடையவர்கள் 60 நாட்கள்தான் இங்கு தங்கி இருக்க முடியும். இவர்கள் அதிக நாட்கள் தங்கி விட்டார்கள். எனவேதான் நாடு கடத்தப்பட இருக்கின்றார்கள் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக