24 அக்டோபர் 2010

நுரைச்சோலை மின்நிலையத்தில் தீப்பற்றியுள்ளது!

நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் சிறிது நேரத்துக்கு முன்னர் தீப்பற்றியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. கல்பிட்டி கடற்படைத் தளத்தின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைப்பதில் பாடுபட்டு வருவதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அத்துல சேனாரத் தெரிவித்தார்.
இதேவேளை, 95 வீதமான தீயைப் படையினர் அணைத்துவிட்டதாகவும், அங்கு எதுவித உயிரிழப்புகளோ சொத்துச் சேதமோ ஏற்படவில்லை என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக