16 அக்டோபர் 2010

தமிழினத் துரோகி மன்மோகன் மலேசியாவுக்குள் வர அனுமதிக்கக் கூடாது!

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு தமிழின துரோகி. அவர் மலேசியாவுக்குள் காலடி வைக்கின்றமையை அனுமதிக்கவே முடியாது.” இப்படிச் சீறுகின்றது மலேசியாவின் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான Malaysia Consumer Advisory Association. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் 27 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கோலாலம்பூர் வருகின்றார். இந்நிலையில் மன்மோகன் மலேசியா வருகின்றமையை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து freemalaysiatoday இணையப் பத்திரிகைக்கு காட்டமாக பேட்டி வழங்கி உள்ளார் Malaysia Consumer Advisory Association இன் தலைவர் எம்.வரதராயு.
கடந்த காலங்களில் இலங்கையில் 80 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளில் இந்தியாவின் பங்கு காத்திரமானது. ஐ.நா சபையின் யுத்தக் குற்ற விசாரணையில் இருந்து இலங்கையை தப்ப வைப்பதிலும் இந்தியா உதவி செய்துள்ளது.
உலகம் பூராவும் வாழும் இந்தியர்களின் பிரச்சினைகள் குறித்து மன்மோகன் சிங்கின் அரசுஒருபோதும் அக்கறை செலுத்துவதாக இல்லை. உலகம் பூராவும் வாழும் தமிழினத்தின் துரோகி இவர்.
இவர் மலேசியாவுக்குள் காலடி வைக்க அருகதை அற்றவர். இவர் மலேசியாவுக்குள் காலடி வைக்கின்றமையை அனுமதிக்க முடியாது. மலேசிய அரசு இவரை அழைக்கவே கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக