18 ஜூலை 2015

கீரிமலை கடற்கரையில் தோன்றியுள்ள அதிசயப் பிள்ளையார்!

யாழ்,கீரிமலை கடற்கரையில் பிள்ளையார் சிலையொன்று திடீரென தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளையார் சிலையை காண மக்கள் படையெடுத்து வருவதாகவும் மேலும் அறிய வருகிறது.இது கடந்த சில தினங்களின் முன்னர் தென்பட்டதாகவும்,கடலில் மிதந்து வந்ததெனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.ஆனாலும் இவ்வுருவச்சிலை அமர்ந்திருக்கும் விதமும் அதன் எடையும் ஆச்சரியமூட்டுவதாகவும்  சொல்லப்படுகிறது.இது கடவுளின் அதிசயம் என மக்களால் போற்றப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக