13 ஜூலை 2015

தமிழ் வாக்குகள் எந்தக் கட்சிக்கு?

இம்முறை நடைபெற இருக்கும் இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு,கிழக்கு பகுதிகளிலும் பெரும் அரசியல் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.பொதுவாக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என நோக்கர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.இந்த தேர்தல் களத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி இரண்டுக்கும் இடையில்தான் பெரும் போட்டி நிலவும் என மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
சமூக வலைத்தளங்களிலும் இவர்களுக்கு ஆதரவான பதிவுகளையே பெரிதும் காண முடிகிறது.வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் எப்பவுமே கொள்கைகளுடன் ஒன்றிப்போனவர்கள்,கொள்கைகளில் இருந்து பின்வாங்கி பம்மாத்து அரசியல் செய்யும் அரசியல் வாதிகளை தூக்கி வீச அவர்களுக்கு இப்பொழுது சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.அந்த வகையிலே சிங்கக்கொடியுடன் சம்பந்தமானவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்பது எதிர்பார்ப்பான ஒன்றாகவே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக