12 செப்டம்பர் 2010

சோமாலியக் கடற்கொள்ளையரை விரட்டிய கப்பல் பணியாளர்கள்!


சோமாலியக் கடலில் சென்று கொண்டிருந்த ஜேர்மனுக்குச் சொந்தமான ஒரு கப்பலைக் கைப்பற்றி கப்பத் தொகை பெற முயன்ற சோமாலியக் கடற்கொள்ளையர்களை அக்கப்பல் பணியாளர்கள் விரட்டிய சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது. கப்பலின் இயந்திரத்தை நிறுத்தி கப்பலைக் கைப்பற்ற வந்த கொள்ளைக்காரர்களைக் கண்ட 11 கப்பல் பணியாளர்கள், உடனும் கப்பல் உரிமையாளர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டனர். எனவே கப்பலைச் சுற்றியிருந்த கொள்ளைக்காரர்கள் ஜேர்மனியிலுள்ள கப்பல் உரிமையாளர்களுடன் நேரடியாகப் பேசக்கூடிய அவசர தொலைத்தொடர்பையே இறுதியில் கண்டுள்ளனர். கொள்ளைக்காரர்கள் கப்பலுக்குள் நுழைந்தும், அங்கு கப்பல் மாலுமி எவரும் இருக்கவில்லை என்பதால் அவர்களால் கப்பலை ஓட்டிச்செல்ல முடியவில்லை. மாலுமி எங்கே எனக் கேட்ட கொள்ளைக்காரர்களுக்கு, அவர்கள் விடுமுறையில் இருப்பதாகப் பதில் கிடைத்ததும் கோபப்பட்டுள்ளனர். இதனால் கப்பலை கடுமையாக சேதப்படுத்தினர்.
அடுத்த நாள் விடிவதற்கு முன்னர் அமெரிக்க படையின் கமாண்டோக்கள் கப்பலுக்கு வந்து தேடுதல் நடத்தி, ஒரு துப்பாக்கிச் சூடும் இல்லாமல் கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்தனர். கமாண்டோக்களிடம் பாரிய ஆயுதங்கள் இருப்பதைக் கண்ட கொள்ளையர்கள் உடனும் அவர்களிடம் சரணடைந்துவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக