16 செப்டம்பர் 2010

ஜகத் டயஸ் மீதான வழக்கு ஆராய்வு!

சிறீலங்கா இராணுவத்தின் 57 ஆவது படையணியின் முன்னாள் கட்டனை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் இன் ஜேர்மன் பிரதித் தூதுவர் பதவிக்கு எதிராக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்ட வழக்கு விசாரணைகளை ஐரோப்பிய நீதிமன்றம் ஆராய்ந்துவருவதாக அதன் பதிவாளர் முல்லர் எல்ஸ்னர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் அதிகளவு மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட டயஸ் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் சுவிஸ் ஈழத்தமிழர் சபை, நோர்வே ஈழத்தமிழர் சபை, அமெரிக்காவை தளமாக கொண்ட இனஅழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியன கடந்த ஜுலை மாதம் வழக்குகளை பதிவு செய்திருந்தன.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படை அதிகாரியை அனுமதித்ததன் மூலம் ஜேர்மன் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை மீறிவிட்டது என அவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பில் நாம் ஆராய்துவருவதாகவும், விசாரணைகள் ஆரம்பமாகும்போது அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமது முறைப்பாட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதற்கான கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சுவிஸ் ஈழத்தமிழர் சபையை சேர்ந்த அருள்நிதிலா தெய்வேந்திரன் தெரிவித்துள்ளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக