07 செப்டம்பர் 2010

பூலித்தேவன் மீது ஆணையிட்டுச்சொல்கிறேன் பிரபாகரன் வருவார்.


நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் விடுதலைப்போராட்ட வீரர் புலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் கருணாஸ்,சசிகலா கணவர் எம்.நடராஜன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
புலித்தேவர் அறக்கட்டளை தலைவர் ம.நடராஜன் பேசும் போது,
’’ஈழத்தில் தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கிருப்பவர்களோ கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? ஆட்சிக்கு யார் வருவது என்பது முக்கியமல்ல. யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம். எனவே அனைவரையும் ஒற்றுமையாக இருந்து இந்த ஆட்சியை தோற்கடிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
பழ.நெடுமாறன், ‘’பூலித்தேவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். பிரபாகரன் மீண்டும் வருவார். இயக்கத்திற்கு தலைமையேற்று வழிநடத்துவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக