05 செப்டம்பர் 2010

தமிழக காக்கிச்சட்டைகளின் அடாவடி அதிகரிப்பு.


நேற்று (04.09.2010) மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் தமிழ்த்தேசியத்தலைவரின் படங்கள் மூடுதுணியால் மூடப்பட்டுள்ளது.
மதுரை தெற்கு வாசல் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழ்தேசியத்தலைவரின் படம் போட்ட பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றுமாறு காவல்துறையினரால் நிர்பந்திக்கப்பட்டது.
இதனை அடுத்து பதாகையில் தேசியத்தலைவரின் படம் போர்வை துணியால் மூடப்பட்ட பின்னரே கூட்டம் நடத்த காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிறப்புரையாக திருச்சி வேலுச்சாமி, இயக்குனர் சிபிச்சந்திரன், கருப்புகுரல் ஐக்கோ, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமார், செந்தில், தமிழ்கூத்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக