27 செப்டம்பர் 2010

கனடிய தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த மரம் நடுகை நிகழ்வு.

உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளான செப் 26 திகதி கனடா தமிழ் இளையோர் அமைப்பு மரம் நடுதல் என்னும் நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தது
திலீபன் அண்ணா தமிழர்களுக்காகவும் தனித்தமிழீழத்திற்காகவும் அன்று தன்னைத் தானே ஆகுதியாக்கி நடாத்திய தியாக வேள்வியின் நினைவு தினத்தை முன்னிட்டு ரொரண்டோ மாநகரில் தமிழ் இளையோர்களின் உதவியுடன் பல மரங்கள் நடப்பட்டு பூமித்தாய்க்கு கையளிக்கப்பட்டன.
இவ் நிகழ்வில் தமிழ் இளையோர் பலர் தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்தை நெஞ்சில் தாங்கியவாறு பங்கெடுத்திருந்தனர்,
திலீபன் அண்ணா அவர்களின் தியாகத்தை வேற்று இன மக்களுக்கு எடுத்துரைத்தவாறு மரம் நடுகை நிகழ்வை நிறைவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக