17 செப்டம்பர் 2010

பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத்தண்டனை!

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் 3 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்தபோது மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட முறைகேடுகள் தொரடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்நீதிமன்றம் இன்று மேற்படி தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக