23 செப்டம்பர் 2010

18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயகத்துக்கு முரணானது: ஐரோப்பிய நாடுகள்.

ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள 18 ஆவது அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாகக் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 18ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கு முரணானது என்று அங்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான சுவீடன், அயர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளே குறிப்பாக தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இதேவேளை, 18ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனநாயக விரோத விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேற்படி மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசின் சார்பில் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் விளக்கமளித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்றில் செய்தி வந்துள்ளது.
மேலும், மேற்படி கண்டனத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளியிட்டபோது, மாநாட்டில் எட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரும் பிரசன்னமாகியிருந்தார் என்றும் அறியப்படுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவிப்பதற்காக பிரதி சொலிஸ்டர் ஜெனரல்கள் இருவர் ஜெனிவாவுக்கு தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக