21 செப்டம்பர் 2010

கூரை மீதேறி போராட்டம் முடிவுக்கு வந்தது!

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து, நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள சுமார் 8 தமிழர்கள் உட்பட, ஒரு ஈரான் நாட்டவரும் சேர்ந்து, சிறைச்சாலையின் கூரையில் ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை ஃபிஜி நாட்டுப் பிரஜை ஒருவர் ஏற்கனவே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து சிறைச்சாலையை சுற்றி அவரது ஆதரவாளர்களும், மனித உரிமை அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கை அகதிகளும் தம்மை திருப்பி அனுப்பவேண்டாம் எனக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் கூரையில் இருந்து தாம் குதிக்கப்போவதாகக் கூறியதை அடுத்து நிலத்தில் மெத்தைகளையும், விழுந்தால் அடிபடாமல் இருக்கும் வகையிலான் பிளாஸ்டிக் வலைப்பின்னல்களும் போடப்பட்டிருந்தது. இருப்பினும் இன்றுடன், இப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அவுஸ்திரேலிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கூரையில் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்திய அனைவரும் கீழே இறங்கியுள்ள நிலையில் ஒருவர் மட்டும் மறுத்ததாகக் கூறப்படுகிறது. அவரை சக கைதிகள் மடக்கிப்பிடித்து பலவந்தமாக கீழே இறக்கியுள்ளனர்.
ஏற்கனவே குதித்து தற்கொலை செய்துகொண்ட ஃபிஜி நாட்டவர், கூரையில் ஏறி நின்றவேளை குதித்துப் பார், அல்லது உன்னால் குதிக்க முடியுமா என்று, அவுஸ்திரேலியப் பொலிசார் அவரை கிண்டல் செய்து, அவரை வெறுப்பேற்றியே குதிக்க வைத்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவுஸ்திரேலியப் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக