23 செப்டம்பர் 2010

ஆசிரியை மீது இளைஞன் துப்பாக்கி சூடு – அம்பாறையில் சம்பவம்!

அம்பாறையில் சியம்பலாண்டுவ சிங்கள மகாவித்தியாலய ஆசிரியை ஒருவர்இன்று காலையில் கடமைக்காக பாடசாலை சென்ற போது இளைஞன் ஒருவன் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
அவ் ஆசிரியை மீது குறித்த பாடசாலையின் சிற்றுண்டி சாலையில் வேலை செய்த ஒருவரே துப்பாக்கியால் சுட்டதாகவும் ஆனால் ஆசிரியை காயங்களுடன் தப்பிவிட்டதாக தெரியவருகிறது.
ஆசிரியை மீது துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் பின் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகதெரியவருகிறது
இந்த சூட்டுச் சம்பவத்தையடுத்து சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம் இன்று மூடப்பட்டுள்ளது
காதலே இந்த சம்பவத்தின் பின்னனியென ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று அண்மையில் வவுனியா நகரசபை உத்தியோகஸ்தர் ஒருவரும் தன்னைத்தானே குடும்பப் பிரச்சினை காரணமாக சுட்டு க்கொண்டு தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கில் பலருக்கும் இராணுவத்தினர் முன்னர் தற்பாதுகாப்பிற்காக ஆயுதங்களை கொடுத்தனர். பின்னர் அதனை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக