24 செப்டம்பர் 2010

புலிகள் என்ற குற்றச்சாட்டில் 17 பேர் தொடந்தும் விளக்க மறியலில்.

கொழும்பின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் 17 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டில் அவர்களை ஒக்ரோபர் 15 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கும்படி கொழும்பு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேடுதல் நடந்தபோது இந்த இளைஞர்கள் மறைந்திருந்ததாகக் கூறியுள்ள போலீசார், கொழும்பில் நாசகார வேலைகளைச் செய்யும் பொருட்டு இவர்கள் அண்மையில் கொழும்புக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளது.
மான்னார் மற்றும் சிலாப கடற்கரையோரமாக நடந்த சில குறிப்பிட்ட செயற்பாடுகளில் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதைத் தமது விசாரணைகள் மூலமாகத் தாம் கண்டறிந்துள்ளதாகவும் போலீஸ் தரப்புத் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக