18 செப்டம்பர் 2010

கரடியனாறு வெடிப்பில் காயமுற்ற மேலுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு!


நேற்று நடைபெற்ற கரடியனாறு வெடிச்சம்பவத்தில் காயமுற்று இருந்து 22 பொலிஸாரில் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு அதிதீவிர சிகிச்சைப்பிரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மு.ப.11.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் காயமுற்ற 44 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 4 பேர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 28 வயது உடைய பொலிஸ் கான்ஸ்டபிள் குமார, அதிதீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7.30 க்கு உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக