18 செப்டம்பர் 2010

சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகள், புத்த கோயில்களை நிறுவுவதிலும் காலத்தை கழிக்கின்றது - ச. வி. கிருபாகரன்.

இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை கொடுப்பதில் எந்த அக்கறையும் செலுத்தாது, தமிழ் மக்களின் தாயக பூமியான தமிழீழத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகள், புத்த கோயில்களை நிறுவுவதிலும் காலத்தை கழிக்கின்றது என பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் திரு ச. வி. கிருபாகரன் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 15வது கூட்டத் தொடர் இந்தவாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் ஐ. நா. விற்கான தாய்லந்து தூதுவர் தலைமையில் நடைபெறுகிறது.
கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில், பல அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களில் அங்கத்தவரும், பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளருமான திரு ச. வி. கிருபாகரன் அவர்கள் தமிழ் மக்களின் நிலைபற்றி எடுத்துரைத்தார். தமிழீழ மக்களுக்கு எந்தவித புனர்வாழ்வு, புனரமைப்பு திட்டங்களை வழங்காத இலங்கை அரசு, சர்வதேச ரீதியாக முழுப் பொய்களைக் கூறிவருகிறது. இப் பொய்களை நம்புவதற்கும் பல தனிநபர்களும், நாடுகளும் உண்டு. காரணம் அவ் நாடுகளும், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு செய்யும் அநியாயங்கள் போன்றே, தமது நாடுகளில் வேறு இனங்களுக்கு செய்கின்றனர்; என்று வி. கிருபாகரன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக