10 செப்டம்பர் 2010

ஆயுதக் களஞ்சியத்தில் வெடிவிபத்து: 3 இராணுவத்தினர் காயம்.

வவுனியாவிலுள்ள இராணுவத்தின் 211 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வெடி விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் .
ஆயுதக் களஞ்சியம் துப்பரவு செய்யப்பட்டபோது கிரனேட் ஒன்று தவறுதலாக வீழ்ந்து வெடித்ததில் இந்த இராணுவ வீரர்கள் காயமடைந்திருந்தனர் என படைத்தரப்பினர் தெரிவித்தனர்.
இவர்கள் தற்போது வவுனியா அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிசம்பவம் குறித்து இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக