30 நவம்பர் 2013

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பாரிய தீ விபத்து!(காணொளி)

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டடம் ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
எனினும் திடீரென ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதென கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அத்துடன், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிகள் வழமைபோன்று இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக