07 நவம்பர் 2013

பொதுநலவாய மாநாட்டுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறுவதனால் போர்க்குற்ற விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு தடை ஏற்படும் எனவும் வலிறுத்தி கொழும்பில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இடதுசாரி கட்சிகள் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் சில பொது அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
ஒரு மணி நேரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு அனேகமான மக்கள் எதிர்ப்பு என்றும் மாநாட்டில் கலந்துகொள்ள கொழும்புக்கு வரும் சர்வதேச தலைவர்கள் இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எதிர்த்து கொழும்பில் இடம்பெற்ற முதலாவது ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக