29 நவம்பர் 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு!

தஞ்சையில் அமையப்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் மாவீரர்களுக்கான பொதுச்சுடரினை பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிறப்புற மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது காலை அரங்க நிகழ்வுகளில் முனைவர் நடராஜன்,சீமான்,பழ.நெடுமாறன் உள்ளிட்ட முதன்மையானவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்கள். அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது மாவீரர் தின நிகழ்வில் பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் ஐயா தெரிவித்தார்.
நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் ஐயா தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேர் வந்து முற்றத்தை பார்த்தனர். விழாவில் நெடுமாறன் ஐயா கருத்து தெரிவிக்கும் போது முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் துயர சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சி களமாக பாசறையாக செயல்படும்.
அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக