04 நவம்பர் 2013

இசைப்பிரியாவின் காணொளி பற்றி வாய் திறக்காத கூட்டமைப்பு!

பிரித்தானியாவின் சனல் நான்கு தொலைக்காட்சி வெளியிட்ட இசைப்பரியா தொடர்பான காணொளி குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கருத்து எதனையும் வெளியிடாமல் மௌனமாக இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் உயர்பீடத்தினர், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் இசைப்பிரியா குறித்து சனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து இதுவரை ஒருவார்தையேனும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் இசைப்பிரியா குறித்த காணொளியை பிரித்தானிய தொலைக்காட்சி வெளியிட்டதை தெரியாதவர்கள் போன்று இருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாகாணசபைத் தேர்தல் பிரசாரங்களின் போது நந்திக் கடல் வரை சென்று வாக்களிக்குமாறு மக்களிடம் பிரசாரம் செய்தனர்.
இறுதிபோரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அரசாங்கத்துக்கும் படையினருக்கும் எதிராக கருத்துக் கூறி அவர்களுக்கு எதிராகவாக்களிக்க வேண்டும் என்று ஆவேசமாகவும் உண்ர்ச்சிபூர்மாகவும் மக்கள் முன்னிலையில் உரையாற்றினர்.
மக்களும் நம்பிக்கையுடன் வாக்களித்தனர். இவர்களும் 30 ஆசனங்களை பெற்றனர். ஆனால் வாக்களித்த மக்களின் கைகளில் பூசப்பட்டமை காய்வதற்குள் இசைப்பிரியா தொடர்பாக மற்றுமொரு காணொளியை சனல் நான்கு தொலைக்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
ஆனால் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் குறிப்பாக முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் இதுவரையும் கருத்துக் கூறாமல் மெனமாக இருப்பது வேதனையளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பில் அரசியல் நடத்தும் மனோகணேசன் கண்டித்துள்ளார். தமிழ்த் தேசய மக்கள் முன்னணி இடைக்கால நிர்வாகத்தின்கீழ் சுயபதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி உள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவுவழங்கும் ஈ.பி.டி.பி இசைப்பிரியாவின் படுகொலை குறித்துசுயாதீன விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தமிழக முக்கியஸ்த்தர்கள் கூட இசைப்பிரியாவின் படு கொலையை கண்டித்து உள்ளனர்.
ஆனால் நந்திக்கடல் வரை சென்று தமிழ்த்தேசியம் பேசி பிரசாரம் செய்த, பிரபாகரனை மாவீரன் எனப் புகழ்ந்த, மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்கப்போகிறோம் என்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெரியவர்கள் அதேகடலில் மிருகத்தனமாக அவமானப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவுக்காக தங்கள் உறுப்புரிமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி இதுவரையும் குரல் கொடுக்க மறுத்தமை ஏன்? என்ற கேள்விகளை மக்கள் கேட்கின்றனர்.
தேர்தல் வெற்றிக்காகமட்டும் தமிழ்த் தேசியம் பேசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் 30 வருடகால போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் சொத்து அழிவுகள் அனைத்தைதயும் மறந்துவிட்டு மென்போக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை வடமாகாணசபையில் வெற்றி பெற்றதமிழத்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் கொழும்பில் தமக்கு பாராட்டு விழாஒன்றை நடத்துமாறு நெருக்கமான நண்பர்களிடம் கேட்டதாகவும் மற்று மொருதகவல் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக