01 நவம்பர் 2013

சடலமாக மீட்கப்பட்ட பெண் பாலியல் வல்லுறவின் பின் கொலை!

யாழ்ப்பாணம் புத்தூர்ப் பகுதியிலிருந்து கடந்த 27ஆம் திகதி காணாமல் போய் பின்னர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த பெண் பாலியல் வல்லுறவின் பின்னரே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.
புத்தூர் கிழக்கைச் சேர்ந்த மைதிலி அமிர்தலிங்கம் (வயது-26) என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு வேளை திடீரெனக் காணாமல் போயிருந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் அப் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த பெண்ணின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சிவசொரூபனால் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக